அமெரிக்க வங்கி கணக்கை ஹக்செய்த இலங்கையர் கைது!
அமெரிக்க வங்கி கணக்குகளை ஹக்செய்து அந்த பணத்தை தனது வங்கி கணக்கிற்கு மாற்றிய சாவகச்சேரியை சேர்ந்த நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
41 வயது நபர் சிஐடியினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபரின் வங்கிக்கணக்கில் 13.4 மில்லியன் காணப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள சகாக்களின் உதவியுடன் சந்தேகநபர் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார் என பொலிஸ்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சந்தேக நபரின் சகாக்கள் அமெரிக்க வங்கி கணக்குகளை ஹக்செய்து அந்த பணத்தை சந்தேகநபரின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பியுள்ளனர்.
இதற்காக இந்த நபர் தனது சகாக்களுக்கு குறிப்பிட்ட தொகை பணத்தை வழங்கியுள்ளார்.சமீபத்தில் இதேபோன்றதொரு குற்றச்செயலிற்காக வவுனியாவில் ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.