சாரதி தொலைபேசியில் உரையாடியபடி பஸ்ஸை செலுத்தியுள்ளார்!

பஸ் சாரதி தொலைபேசியில் உரையாடிக்கொண்டே பஸ்ஸை செலுத்தினார். இதனை நான் கண்ணுற்றேன்.”  – என்று பசறை பஸ் விபத்தில் நொடிப்பொழுதில் உயிர் தப்பிய நடைபாதை வர்த்தகரான இம்ரான் என்பவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

” குறித்த சாரதி தொலைபேசியில் உரையாடியபடி வேகமாக பஸ்ஸை செலுத்திவந்தார். அதில் பயணிப்பதற்காக பஸ்ஸை நிறுத்துவதற்கு முயன்றேன். ஆனால் நிறுத்தாமல் சென்று பள்ளத்தில் வீழ்ந்தது.” எனவும் அவர் கூறியுள்ளார்.

பசறை 13 ஆம் கட்டைப்பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தானது இதுவரை 15 பேரின் உயிர்களை பலியெடுத்துள்ளது. இவ்விபத்தானது மலையகத்தை மட்டுமல்ல ஒட்டுமொத்த நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அதுமட்டுமல்ல விபத்துகளை கட்டுப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் கருத்தாடல்கள் எழுந்துள்ளன.
குறிப்பாக வாகனத்தை செலுத்தும்போது சாரதிகள் தொலைபேசியில் உரையாடுவதை தடை செய்வதற்கான சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த வேண்டும். பிரதான வீதிகளை உரிய வகையில் புனரமைக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *