மேற்கத்திய தீவுகள் அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி!

சுற்றுலா இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது ஒரு நாள போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றிப் பெற்றுள்ளது. 

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. 

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 49 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 232 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. 

இலங்கை அணி சார்பில் தனுஸ்க குணதிலக அதிகபட்சமாக 55 ஓட்டங்களையும், திமுத் கருணாரத்ன 52 ஓட்டங்களையும் மற்றும் அசேன் பண்டார 50 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். 

பந்து வீச்சில் ஜேசன மொஹமட் மற்றும் ஜேசன் ஹொல்டர் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களை கைப்பற்றினர். 

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 47 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 236 ஓட்டங்களைப் பெற்று வெற்றி இலக்கை அடைந்தது. 

அவ்வணி சார்பில் சாய் ஹோப் அதிக பட்சமாக 110 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். 

எவின் லிவிஸ் 65 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். 

அதன்படி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. 

முன்னதாக இடம்பெற்ற இருபதுக்கு இருபது தொடரில் 2-1 என்ற கணக்கில் மேற்கிந்திய தீவுகள் அணி தொடரை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *