கிரிக்கெட் வீரர் டில்ஷானின் மகள் புதிய சாதனை படைத்துள்ளார்!
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், சகலத்துறை ஆட்டக்காரருமான திலகரத்ன டில்சானின் மகளான லிமன்ஷா திலகரத்ன, புதிய கிரிக்கெட் சாதனையொன்றை படைத்துள்ளார்.
Premier Level கிரிக்கெட் போட்டியில் விளையாடிய இளம் வீராங்கனை என்ற சாதனையையே அவர் படைத்துள்ளார். 6 ஆம் தரத்தில் கல்வி பயிலும் லிமன்ஷா, மெல்பேர்ன் அணியை பிரதிநிதித்துவப்படுத்துகின்றார். அண்மையில் பங்கேற்ற முதல் போட்டியில் முதல் ஓவரிலேயே விக்கெட்டொன்றை வீழ்த்தியுள்ளார்.
தமது குடும்பம் சகிதம் டில்சான் தற்போது ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.