பஸ் சாரதியாக வேலை செய்யும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள்
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களான சுராஜ் ரன்திவ் மற்றும் சிந்தக ஜயசிங்க ஆகியோர் அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் பேருந்து சாரதிகளாக பணிபுரிவதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரித்தானிய நிறுவனமொன்றில் குறித்த இருவரும் பணிபுரிவதாக வௌிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சுராஜ் ரன்திவ் 2011 ஆம் ஆண்டு இடம்பெற்ற உலகக்கிண்ணத் தொடரில் இந்தியாவுடனான இறுதிப் போட்டியில் விளையாடியிருந்தார்.
மேலும், குறித்த இருவரும் மெல்பர்ன் நகரில், விளையாட்டு கழகமொன்றிற்காக விளையாடி வருவதாக தெரிவிக்கப்படுகிறது