இலங்கையில் ஒரே நாளில் அதிகூடிய கொரோனா மரணங்கள் பதிவானது!
இலங்கையில் நேற்றைய தினத்தில் அதிகூடிய கொரோனா மரணம் பதிவானது தொற்றுக்கு உள்ளாகி மேலும் 13 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார்.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 422 ஆக அதிகரித்துள்ளது மேலும் 722 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.மொத்த எண்ணிக்கை 79906 ஆக அதிகரித்துள்ளது.