கொரோனாவால் குணமடைந்தவர்களுக்கு புதிய வைரஸ் தொற்று!
தென் ஆப்பிரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவா்களுக்கு, அந்த நாட்டில் பரவி வரும் புதுவகை கொரோனா தொற்று ஏற்பட்டு வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
தற்போதைய கொரோனா தடுப்பூசிகள் புதுவகை கொரோனாவைத் தடுப்பதற்குப் போதுமானதாக இல்லை; எனினும், அதனால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கக் கூடும் என்று இதுதொடா்பான ஆய்வுகள் தெரிவிக்கின்றன