சொன்னதை செய்து விட்டோம் ரமேஷ் தெரிவிப்பு!
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என சம்பள நிர்ணயசபையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனவே, வழங்கிய வாக்குறுதியின் பிரகாரம் இ.தொ.கா. 1000 ரூபா சம்பள உயர்வை பெற்றுக்கொடுத்துள்ளது என்று இ.தொ.காவின் நிதிச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஸ்வரன் தெரிவித்தார்.அத்துடன், தொழில் அமைச்சர் 14 நாட்களுக்குள் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்ட பின்னர் சம்பள உயர்வு நடைமுறைக்கு வரும் எனவும் அவர் கூறினார்.