புதிய கொரோனாவால் அவசர சிகிச்சைப் பிரிவு முழுமையாக முடக்கம்!
இங்கிலாந்தில் நேற்று ஒரே நாளில் 53 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளது. புள்ளிவிவரங்கள் படி கடந்த 24 மணி நேரத்தில் 53 ஆயிரத்து 135 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இங்கிலாந்தில் 71 ஆயிரத்து 567 பேர் உயிரிழந்துள்ளனர்.
தலைநகர் லண்டனில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை பிரிவு மொத்தமாக முடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.