குணமடைந்த கொரோனா நோயாளிகளை 8 மாதங்களுக்கு மீண்டும் கொரோனா தொற்றாது!
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களை ஏறத்தாழ 8 மாதங்களுக்கு கொரோனா தொற்று மீண்டும் பாதிக்காது என்று பல்வேறு ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. மேலும், எதிர்ப்பு சக்தி அறிவியல் என்ற சர்வதேச மருத்துவ இதழில் கொரோனா வைரஸ் தொற்று குறித்த விரிவான ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஆஸ்திரேலியாவின் மொனாஷ் பல்கலைக்கழகம் உள்ளிட்ட சில இடங்களில் விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.
மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில், அந்த தொற்றின் எதிரான எதிர்ப்பு சக்தி குறைந்தது 8 மாதங்களுக்கு அவர்கள் உடலில் இருக்கும் என்று அக்கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. கொரோனா பாதித்த 25 பேரை சோதனைக்குட்படுத்தி, தொற்று ஏற்பட்ட 4ஆவது நாளில் இருந்து 242ஆவது நாள் வரை அவர்களின் ரத்த மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டது. இதில் தொற்று ஏற்பட்ட 20ஆவது நாளில் இருந்தே எதிர்ப்பு சக்தி உருவாகத் தொடங்கி விடுவதாகவும், அது 240 நாட்கள் வரை நீடிப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டுக்கொள்ளும்போது இந்த எதிர்ப்பு சக்தி அதிக நாட்கள் நீடிக்கும் என்றும் அந்த ஆய்வில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது….