8 வைத்தியர்கள் உட்பட 115 பேருக்கு கொரோனா!
சப்ரகமுவ மாகாணத்தில் துரிதமாக கொரோனா தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதனால் இப்பிரதேசத்தில் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த கடுமையான சட்டங்களை நடைமுறைபடுத்த இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களின் கொரோனா கட்டுப்பாட்டு செயலணிகள் தீர்மானங்களை மேற்கொண்டுள்ளதாக சப்ரகமுவ மாகாண தொற்று நோய் வைத்தியப் பிரிவின் அதிகாரி லக்மால் கோனாரா தெரிவித்தார்.
கடந்த சில தினங்களாக கேகாலை மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளதுடன் இவர்களில் 8 பேர் வைத்தியர்கள் ஆக இருப்பது அவதானத்துக்குறிய விடயம் எனவு ம் அவர் தெரிவித்தார்.
இதேவேளை இரத்தினபுரி மாவட்ட த்தின் அவதானத்துக்குரிய இடங்கள் கடுமையான சட்டங்களுடன் பயணக்கட்டுப்பாடு மற்றும் தனிமைப்படுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இம்மாவட்டத்தில் 49 பேர் கொரோனா நோயாளர்களாக சிகிச்சை பெற்று வருகின்றனர். சப்ரகமுவ மாகாணத்தின் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 115 ஆக அதிகரித்துள்ளனர்.