இலங்கை அரசாங்கம் மக்களை அமைதியாக சாகடிக்க முயல்கிறது?

கொரோனா வைரஸ் என்ற கொடிய நோய் இன்று சமூகத்துக்குள் ஊடுருவி பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகின்ற போதும், அரசோ நாட்டை முழுமையாக முடக்காமல் மௌனம் காப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி இந்த நிலையில், மக்களை அமைதியாகச் சாகடிக்க அரசு முயல்கின்றதா என்ற கேள்வி எழுந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அரசு கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டது. கொரோனா வைரஸ் அதிவேகத்தில் பரவுகின்ற நிலையில் அரசு பொறுப்புணர்வில்லாமல் நடந்து கொள்கின்றது.

மேலும் ,தேர்தலுக்கு முன்னர் கோட்டாபய ராஜபக்சவிடம் காணப்பட்ட இரக்க உணர்ச்சியை தற்போது காண முடியவில்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *