கொரோனா வார்டில் பணியாற்றிய நடிகைக்கு கொரோனா!

கொரோனா வார்டில் பணியாற்றிய பிரபல இந்தி நடிகை ஷிகா மல்கோத்ரா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இந்தி நடிகை ஷிகா மல்கோத்ரா, வர்தமான் மகாவீர் மருத்துவ கல்லூரி மற்றும் சப்தர்ஜிங் மருத்துவமனையில் நர்சிங் படித்துள்ளார்.

இந்நிலையில் நடிகையாக வலம் வந்தாலும், கொரோனா இந்தியாவில் பரவத் தொடங்கிய நாளில் இருந்து மும்பையில் உள்ள மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார்.

ஒரு நர்சாக, நடிகையாக நாட்டிற்கு சேவை செய்ய ஆவலாக உள்ளதாகவும், தயவுகூர்ந்து அரசுக்கு ஆதரவு அளிப்பதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில் கொரோனா தொற்றால் தற்போது பாதிக்கப்பட்டுள்ள ஷிகா மல்கோத்ராவின் ஆக்சிஜன் அளவு குறைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *