அரசுடன் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஐவர் சங்கமம்?
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஐவர் அரசாங்கத்துடன் சங்கமிக்கவுள்ளனர் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
’20’ ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களித்த பின்னர் அவர்கள் அரசாங்கத்துடன் இணைவார்கள் என தகவல் வெளியாகியுள்ளனர்.
இவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஸில் ராஜபக்ச நேரில் களமிறங்கியுள்ளார் எனவும் தெரியவருகின்றது.