இலங்கையில் நேற்று திடீரென அதிகரித்த கொரோனா!
இலங்கையில் நேற்று (13) இதுவரை 39 பேருக்கு கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்படி கொரோனா தொற்றுக்கு உள்ளாகியோர் மொத்த எண்ணிக்கை 3,234 ஆக உயர்ந்துள்ளது.
இவ்வாறு வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய 39 பேருக்கே தொற்று கண்டறியப்பட்டுள்ளனர்.
இப்போது கொரோனா தாெற்று (Active) இருப்போர் எண்ணிக்கை 226 ஆக காணப்படுகிறது.
இதேவேளை இதுவரை 2,996 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.