இலங்கையில் பூனையை திருடியவருக்கு 6 மாத கடூழிய சிறைத் தண்டனை!
காலியில் பூனையை திருடிய ஒருவருக்கு ஒருவருடம் ஒத்திவைக்கப்பட்ட 6 மாத கடூழிய சிறைத்தண்டனை விதித்து காலி நீதவான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பர்சியன் வர்க்கத்தினை சேர்ந்த 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான பூனையே இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளது.
அத்துடன் குற்றவாளிக்கு 1000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.