ஆணைக்குழுவில் ஹக்கீம் 6 ரணில் 5 மணித்தியாலங்கள் வாக்குமூலம்!

அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் சுமார் 5 மணித்தியாலங்களாக வாக்குமூலமளித்த ஐக்கிய தேசியக் கட்சித் தலைவரும் முன்னாள் பிரதமருமானர ணில் விக்ரமசிங்க அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் வாக்குமூலமளிப்பதற்காக இன்று (04) காலை ஐ.தே.க. தலைவர் ரணில் விக்ரமசிங்க முன்னிலையாகியிருந்தார்.
இதேவேளை,  இன்று காலை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் முன்னிலையாகியிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ரஊப் ஹக்கீம், 6 மணித்தியாலங்களாக வாக்குமூலம் வழங்கிவிட்டு அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *