கொரோனாவை தடுக்க வருகிறது புதிய களிம்பு –

அமெரிக்க மருந்து நிறுவனம் ஒன்று, கொரோனாவை தடுக்கும் களிம்பு ஒன்றை உருவாக்கி உள்ளது.

இதற்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. அதன்பேரில் இந்த களிம்பு பரிசோதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான பரிசோதனைக்கூட அறிக்கை, இந்த களிம்பை (மூக்கில்) தடவிக்கொண்ட 30 வினாடிகளுக்கு பிறகு எந்த வைரஸ் தொற்றும் கண்டறியப்படவில்லை என கூறுகிறது. இந்த களிம்பு ‘டி3எக்ஸ்’ என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.

இதேவேளை இந்த மருந்தை வாங்குவதற்கு மருத்துவரின் சீட்டு கூட தேவைப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்து பயன்பாட்டுக்கு வந்த பிறகு மூக்கு துவாரங்கள் மீது தடவிக்கொண்டால் அது வைரஸ் நுழைவதைத் தடுக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *