இங்கிலாந்தில் அவசர நிலை பிரகடனம்!

இங்கிலாந்தில் நிலவும் உச்சபட்ச வெப்பம் காரணமாக தேசிய அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய நாட்களில் அதிகபட்ச வெப்ப நிலை நிலவும் என பிரிட்டன் வானிலை ஆராய்ச்சி மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இரவு நேரத்திலும் வெப்பம் அதிகம் காணப்படும் என்றும், அதிகபட்சமாக நகர்ப்புறங்களில் வெப்ப நிலை உச்சம் தொடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உச்சபட்ச வெப்ப நிலை நிலவுக்கூடும் என்பதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதிக வெப்பநிலை காரணமாக திங்கள் மற்றும் செவ்வாய்க் கிழமைகளில் பாடசாலைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக தாவரவியல் பூங்காவில் கடந்த 2019ஆம் ஆண்டு அதிகப்படியாக 38.7 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவானது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *