மொட்டு கட்சியின் பிரபலமான ஐந்து உறுப்பினர்கள் இராஜினாமா செய்யத் தீர்மானம்!
ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்காத பிரபல உறுப்பினர்கள் சிலர் நாடாளுமன்ற உறுப்புரிமையை இராஜிநாமாச் செய்யவுள்ளனர் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டுமாகாண முதலமைச்சராகப் பதவி பெறுவதே அவர்களது எதிர்பார்ப்பாக உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி புதிய நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகிய பிரபல அரசியல்வாதிகளான சுசில் பிரேமஜயந்த, அநுர பிரியதர்சன யாப்பா, ஜோன் செனவிரத்ன, சான் விஜேலால், சந்திம வீரக்கொடி ஆகியோர் இந்த முடிவை எடுத்துள்ளனர் எனக் கூறப்படுகின்றது.
மேலும் பதுளை மாவட்ட எம்.பியொருவரும் ஊவா மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது என தேசிய நாளிதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது