மின் தடையால் மின்சார சபைக்கு 100 கோடி ரூபா இழப்பு!

கெரவலப்பிட்டிய மின் கட்டமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக நேற்றைய தினம்(17) நாடு முழுவதும் ஏற்பட்ட 8 மணிநேர மின்தடை காரணமாக, 100 கோடி ரூபாவுக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக மின்சார அமைச்சு தெரிவித்துள்ளது.

பொதுவாக நாள் ஒன்றுக்கு 1.8 மில்லியன் மின்சார யுனிட்களும், இரவில் 2 மில்லியனுக்கும் அதிகமான மின்சார யுனிட்களும் வழங்கப்படுகிறது எனவும், யுனிட் ஒன்றுக்கு 125 ரூபா பொருளாதார இழப்பு ஏற்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளாதாகவும் மின்சார அமைச்சு தெரிவித்துள்ளது.

மின்சார தடையால் நீர்தடையும் நேற்று(17) ஏற்பட்டதுடன், கொழும்பில் போக்குவரத்து தடையும் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *