இலங்கை நிழல் உலக தாதா எஸ்.எப். லொக்கா சுட்டுக்கொலை!
பாதாளக்குழு உறுப்பினர் எஸ்.எப். லொக்கா என்றழைக்கப்படும் எரோன் ரணசிங்க இன்று முற்பகல் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
அனுராதபுரம் தஹாயியாகம பகுதியில் வைத்தே அவர் இவ்வாறு சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரின் வயது 33.
துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான அவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே உயிரிழந்தார் என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், எஸ்.எப். லொக்காவுடன் காரில் பயணித்த பெண்ணொருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவருகின்றார்.