கொரோனாவால் சராசரியாக ஒவ்வொரு நாளும் 5900 பேர் உயிரிழப்பு!

கடந்த இரண்டு வாரங்களின் தரவுகளின் அடிப்படையில் கொரோனா வைரஸ் பாதிப்பால் சராசரியாக ஒவ்வொரு நாளும் அதாவது ஒவ்வொரு 24 மணி நேரத்துக்கும் சுமார் 5,900 பேர் உயிரிழந்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.”

கொரோன வைரஸ் பாதிப்பால் உலகமே திணறி வருகிறது. ஆரம்பத்தில் பாதிக்கப்பட்ட பல நாடுகளும் வைரஸ் பாதிப்பில் இருந்து தற்போது மீண்டு வருகின்றன. ஆனால், அலட்சியமாக இருந்த பல நாடுகளிலும் கொரோனா கடுமையாகப் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பரவலை கட்டுப்படுத்த முடியாமல் இந்த நாடுகள் திணறி வருகின்றன. இந்த நிலையில், கடந்த இரண்டு வாரங்களின் தரவுகளின் அடிப்படையில் கொரோனா வைரஸ் பாதிப்பால் சராசரியாக ஒவ்வொரு நாளும் அதாவது, ஒவ்வொரு 24 மணி நேரத்துக்கும் சுமார் 5,900 பேர் உயிரிழந்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கணக்கின்படி, ஒவ்வொரு மணி நேரத்துக்கும் 247 பேர் அதாவது 15 விநாடிக்கு ஒரு நபர் உயிரிழப்பதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *