நீரில் மூழ்கி இரண்டு பாடசாலை மாணவர்கள் பலி!

கிரிந்திவெல- ரன்வல பகுதியிலுள்ள நீரோடையில் நேற்று நீராட சென்ற இரண்டு பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்

குறித்த இரண்டு மாணவர்களும் (19 வயது) இம் முறை கல்வி பொதுத்தராதார உயர்தர பரீட்சைக்கு தோற்ற உள்ளவர்கள் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

வெலிவேரியா மற்றும் முடுங்கோட பகுதியைச் சேர்ந்த இரு மாணவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *