இந்தியாவில் ஒரே நாளில் 54 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு!

உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீயாக பரவி வருகிறது. இதற்கிடையே, கடந்த ஜூலை 27-ம் தேதி வரை இந்தியா முழுவதும் மொத்த கொரோனா பாதிப்பு எவ்வளவு என்பதை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளிப்படையாக அறிவித்து வந்தது. ஆனால், இந்தியாவில் கொரோனா பாதிப்பு 15 லட்சத்தை தாண்டியதால், கடந்த 28-ம்தேதி முதல் மொத்த பாதிப்பு தகவல் வெளியிப்படவில்லை. குணமடைந்தவர்கள், உயிரிழந்தவர்கள், சிகிச்சை பெற்றுபவர்களின் விவரங்ளை வெளியிட்டு வருகிறது.

இதன்படி, இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 37,364 பேர் உயிரிழந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 853 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 11,45,629 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 51,255 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு 5,67,730 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை மொத்தம் 17,50,723 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 54,735 பேருக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் இதுவரை 15,316 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 2,66,883 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது வரை 1,49,520 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வரிசையில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் இதுவரை 4034 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 1,90,966 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது வரை 56,738 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். டெல்லி 3-வது இடத்தில் உள்ளது. டெல்லியில் 3,989 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 1,22,131 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது வரை 10,596 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா தொடர்ந்து 3-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *