திருப்பதி கோயிலில் பணிபுரியும் 140 பேருக்கு கொரோனா!
ஜூன் 11ஆம் தேதி முதல் தற்போது வரை, திருப்பதி கோயிலில் பணிபுரியும் 140 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
அவர்களில் 14 பேர் உதவி பூசாரிகள், 56 பேர் பாதுகாப்பு பணியாளர்கள், மற்றும் 16 பேர் லட்டு தயாரிக்கும் சமையல் கூட்டத்தில் பணியாற்றுபவர்கள். பிறர் தேவஸ்தானத்தின் வெவ்வேறு பிரிவுகளில் பணியாற்றுகிறார்கள்.
கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட 140 பேரில் 70 பேர் குணம் அடைந்து உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.