இலங்கையில் நாளை ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள்
புனித ஷவ்வால் மாத்திற்கான தலைப்பிறை தென்பட்டுள்ள நிலையில் நாளைய தினம் புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் கொண்டாப்படும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.
ஷவ்வால் மாத தலைப் பிறையை தீர்மானிக்கும் மாநாடு கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இன்று மஹ்ரிப் தொழுகையைத் தொடர்ந்து இடம்பெற்றது.