இலங்கையில் திடீரென அதிகரித்த கொரோனா வைரஸ் தொற்றாளர்கள்

இலங்கையில் இன்று காலை மட்டும் 24 கொரோனா நோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி இலங்கையின் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 295ஆக உயர்ந்துள்ளது.

கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தையிலேயே இவர்கள் அடையாளம் காணப்பட்டதாககவும் கூறப்படுகின்றது.

இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ள அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கொழும்பு 12 பண்டாரநாயக்க மாவத்தைப் பகுதியில் உள்ளவர்கள் என்றும் தெரிவிக்கபப்ட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *