ஊரடங்கு சட்டத்தால் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட கோழிக் குஞ்சுகள் உயிருடன் புதைக்கப்பட்டுள்ளது
ஊரடங்கு காரணமாக தீவின பற்றாக்குறை ஏற்பட்டதால், 1லட்சத்திற்கு அதிகமான கோழிகுஞ்சுகளை ஈரானில் புதைத்ததாக வீடியோ ஒன்று பகிரப்பட்டு வருகிறது.
வெளியிடப்பட்ட அந்த வீடியோவில், டிரக் ஒன்று மூலம் ஒரு நாள் மட்டுமே ஆன கோழி குஞ்சுகள் குழியில் போடுவதை காணலாம்.
அதில் 116,640 கோழிகுஞ்சுகள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானில், ஊரடங்கால், கோழிகளுக்கான தீவனமான சோளம், சோயாபீன்ஸ்கள் கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்று கோழிகள் வளர்ப்பு துறை தலைவர் ஐ.எஸ்.என்.ஏ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.