உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1.34 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 134,603 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 2,082,822 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 510,046 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 51,160 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி கண்டறியப்பட்டு தற்போது 209 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

  • இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,933 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 392 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் 1,344 பேர் குணமடைந்தனர்.  
  • தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,242 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 118 ஆக அதிகரித்துள்ளது.
  • அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 28,529 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 644,089 ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 2,482 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • இத்தாலியில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 21,645 ஆக அதிகரித்துள்ளது. இத்தாலியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 165,155 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 578 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • ஸ்பெயினில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 18,812 ஆக அதிகரித்துள்ளது. ஸ்பெயினில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 180,659 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 557 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • பிரான்ஸில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 17,167 ஆக அதிகரித்துள்ளது. பிரான்ஸில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 147,863 ஆக அதிகரித்துள்ளது. பிரான்ஸில் ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 1,438 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • பிரிட்டனில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 12,868 ஆக அதிகரித்துள்ளது. பிரிட்டனில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 98,476 ஆக உயர்ந்துள்ளது. பிரிட்டனில் ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 761 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • ஈரானில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 4,777 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 76,389 ஆக அதிகரித்துள்ளது.
  • சீனாவில் 3,342 பேரும், ஜெர்மனியில் 3,804 பேரும், பெல்ஜியத்தில் 4,440 பேரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
  • நெதர்லாந்து 3,134 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். துருக்கியில் 1,518 பேரும், சுவிட்சர்லாந்தில் 1,239 பேரும், பிரேசில் நாட்டில் 1,757 பேரும், சுவீடன் நாட்டில் 1,203 பேரும் கோரோனாவுக்கு பலியாகியுள்ளனர். மேலும் பல நாடுகளில் பலி எண்ணிக்கை உயர்ந்துக்கொண்டு வருகிறது.
  • சீனாவில் 82,295 பேருக்கும், ஜெர்மனியில் 134,753 பேருக்கும் கொரோனா பாதித்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சீனாவில் கொரோனா தொற்று மீண்டு பரவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *