இலங்கையர் ஒருவர் லண்டனில் கொரோனா வைரஸால் உயிரிழப்பு
கொரானா தொற்றுக்குள்ளான இலங்கையர் ஒருவர் லண்டனில் உயிரிழந்துள்ளார்.
தில்லைநாதன் ஆனந்தவர்ணன் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி பூநகரியை பிறப்பிடமாக கொண்ட இவர் நேற்று இலண்டனில் உயிரிழந்துள்ளார்.
இலண்டனில் ஊடகவியலாளராக செயற்பட்ட தனது மகன் தில்லைநாதன் ஆனந்தவர்ணன், கொவிட் – 19 தொற்றினால் உயிரிழந்ததாக அவரின் தந்தை தெரிவித்தார்