அமெரிக்க வங்கியில் 1400 மில்லியன் டொலர் பணத்தை திருடிய இலங்கையர்கள் கைது
அமெரிக்காவிலுள்ள வங்கியொன்றின் இணையக் கணக்கை ஹக் செய்து, 1400 மில்லியன் டொலர் பணத்தை திருட்டிய 7 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் சில தமிழ் இளைஞர்களும் சிக்கியுள்ளனர்.
இந்த திருட்டை, குறிப்பிட்ட அமெரிக்க வங்கி அறிந்து கொள்ளாமலிருந்த நிலையில், பணம் வைப்பிலிடப்பட்ட இலங்கையிலுள்ள வங்கியொன்றின் மூலம் திருட்டு அம்பலமானது.
அமெரிக்க வங்கியின் இணையத்தளத்தை ஹக் செய்து, 1400 மில்லியன் ரூபா பணத்தை திருட்டிய 7 இளைஞர்களும் அதை இலங்கையிலுள்ள தனியார் வங்கியொன்றில் வைப்பிலிட்டுள்ளனர். ஒரே தடவையில் வைப்பிட்டால் சந்தேகம் ஏற்படுமென்பதால், அந்த தனியார் வங்கியின் 36 கிளைகளில் பணத்தை பிரித்து வைப்பிலிட்டனர்.