இரயில்வே திணைக்களம் விடுத்துள்ள விஷேட அறிவிப்பு!

தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு தூர பிரதேசங்களுக்கான விசேட இரயில் சேவைகள் முன்னெடுக்கப்பட மாட்டாது என இரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

பண்டிகைக் காலப்பகுதியில் பொது மக்களின் நலன் கருதி விசேட இரயில் சேவை முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், இம்முறை குறித்த சேவை முன்னெடுக்கப்பட மாட்டாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த தீர்மானமானது பொது மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துமென  இரயில் நிலைய அதிபர்கள் சங்கம் போக்குவரத்து அமைச்சுக்கு அறிவித்துள்ளது.

இதன்படி, பொது மக்கள் விரைவில் தூரப் பிரதேசங்களுக்கு பயண நடவடிக்கையினை முன்னெடுப்பதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறு இரயில் நிலைய அதிபர்கள் சங்கம்  வலியுறுத்தியுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *