அடங்காமல் ஆட்டம் போடும் கொரோனா வைரஸால் பலி எண்ணிக்கை 33000ஐ தாண்டியது
உலக நாடுகள் முழுவதையும் உலுக்கி எடுத்துவரும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்து 34ஆக உயர்ந்துள்ளது.
சீனாவின் ஹூபேய் மாகாணம் வுஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் பரவியுள்ளது.
இந்த வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. நாளாந்த உயிரிழப்பு எண்ணிக்கை 18 வீதமாகியுள்ளது.
உலகம் முழுவதும் இதுவரை 6 இலட்சத்து 91 ஆயிரத்து 494 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது.
மேலும், 5 இலட்சத்து 10 ஆயிரத்து 859 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை ஒரு இலட்சத்து 47 ஆயிரத்து 601 பேர் குணமடைந்துள்ளனர்.