பதுளையில் தமிழ்ப் பெண் கழுத்தறுத்த படுகொலை
பதுளையில் தமிழ் வர்த்தகரின் மனைவி கழுத்தறுத்துப் படுகொலை! தாலிக்கொடியையும் அறுத்து கொள்ளைக் கும்பல் வெறியாட்டம்
குடும்பப் பெண்ணொருவர், கொள்ளைக் கும்பலால் கொடூரமாக கொலைசெய்யப்பட்டுள்ள சம்பவமொன்று இன்று (28) முற்பகல் பதுளையை, கைலகொட என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளது.
பதுளையில் வர்த்தகரொருவரின் மனைவியான ரவி கௌரிதேவி (48 வயது நிரம்பிய) என்ற இரு பிள்ளைகளின் தாயே இவ்வாறு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் இன்று காலை ஆலயத்திற்குச் சென்று வீடு திரும்பியதும் – மூன்று இளைஞர்கள் அடங்கிய கொள்ளைக் கும்பலொன்று வீட்டிற்குள் புகுந்து இந்த அராஜக செயலில் ஈடுபட்டுள்ளது.