சஜித்தின் வெற்றிக்குப் பின்னால் நிற்கும் பெரும் புள்ளிகள்!

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸ அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரான அமைச்சர் மனோ கணேசன் இன்றிரவு அதிரடியாகப் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்தப் புகைப்படத்தில் ஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுடன் ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களும், அமைச்சர் மங்கள சமரவீர உள்ளிட்ட சஜித் ஆதரவு அணியின் முக்கியஸ்தர்களும் நிற்கின்றார்கள்.

இவர்களை நம்பித்தான் – இவர்களின் பலத்துடன்தான் ஜனாதிபதி வேட்பாளராகத் தான் களமிறக்கப்படுவேன் என்ற நம்பிக்கையுடனும் துணிவுடனும் சஜித் உறுதியாக நின்றார். அதில் அவர் இப்போது வெற்றியும் கண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *