மேல் மாகாண ஆளுநராகப் பதவியேற்றார் முஸம்மில்!
மேல் மாகாணத்துக்கானப் புதிய ஆளுநராக ஏ.ஜே.எம். முஸம்மில் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் இன்று (04) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்தார்.
மேல் மாகாண ஆளுநராக இருந்த அஸாத் ஸாலி நேற்றுப் பதவியை இராஜிநாமா செய்திருந்தார்.
இந்தநிலையில், மேல் மாகாணத்துக்கான புதிய ஆளுநராக ஏ.ஜே.எம். முஸம்மில் இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு மாநகர சபையின் முன்னாள் மேயரான ஏ.ஜே.எம். முஸம்மில், இறுதியாக மலேஷியாவுக்கான இலங்கைத் தூதுவராகப் பணியாற்றியிருந்தார்.