அஸாத் ஸாலி, ஹிஸ்புல்லா ஆளுநர் பதவியைத் துறப்பு!
மேல் மாகாண ஆளுநர் அஸாத் ஸாலி, கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா ஆகியோர் தமது பதவிகளைத் துறந்துள்ளனர்.
அவர்கள் தமது இராஜிநாமாக் கடிதங்களை இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேரில் கையளித்தனர் எனவும், இருவரின் இராஜிநாமாக் கடிதங்களையும் ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார் எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்தது.