ரிஷாத் குற்றவாளியெனில் சிறைக்கு அனுப்பவும் தயங்கோம்! – மனுஷ நாணயக்கார அதிரடி

“அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் உண்மையென நிரூபிக்கப்படுமானால் அவரை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்குவது மட்டுமின்றி சிறைக்கு அனுப்பவும் தயங்கமாட்டோம்.”

– இப்படி இன்று அதிரடிக் கருத்தை வெளியிட்டுள்ளார் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார.

அமைச்சர் ரிஷாத் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கு நாடாளுமன்றத் தெரிவுக்குழுவே சிறந்த வழி எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *