வடக்கின் சகல வழிபாட்டுத் தலங்களிலும் நாளை மணி ஒலி எழுப்பி அஞ்சலிப்போம்!
குண்டுத் தாக்குதலின் ஒரு மாதப் பூர்த்தியை
நினைவுகூருமாறு வடக்கு ஆளுநர் அழைப்பு
பயங்கரவாதத் தாக்குதலின் ஒரு மாதப் பூர்த்தியை முன்னிட்டு நாளை செவ்வாய்க்கிழமை சகல வழிபாட்டிடங்களிலும் மணி ஒலி எழுப்பி அஞ்சலி செய்யுமாறு வடக்கு மாகாண ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார்.
இலங்கையில் பல பாகங்களிலும் கடந்த மாதம் 21ஆம் திகதி ஈஸ்டர் தினத்தில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களின் ஒரு மாத பூர்த்தியை நினைவுகூரும் முகமாக நாளை 21ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 8.45 மணிக்கு வடக்கு மாகாணத்தின் அனைத்து சமய வழிபாட்டுத் தலங்களிலும் மணியோசை ஒலிக்கச் செய்வதுடன் ஒரு நிமிட மௌன அஞ்சலியையும் மேற்கொள்ளுமாறு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் வடக்கின் அனைத்து சமயத் தலைவர்களையும் கேட்டுள்ளார்.
வடக்கு மாகாணத்தின் அனைத்து மக்களையும் இதில் இணைந்து கொள்ளுமாறும் அவர் கோரியுள்ளார்.