மினுவாங்கொடை வன்முறை: சிங்களவர்கள் 13 பேர் கைது!
மினுவாங்கொடையில் நேற்று இடம்பெற்ற வன்முறை தொடர்பில் சிங்களவர்கள் 13 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் மீது தாக்குதல் மேற்கொண்டு பாரிய பாதிப்புகளை ஏற்படுத்திய 13 பேரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
வடமேல் மாகாணத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னக்கோன் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.