வன்முறைகளையடுத்து சமூக வலைத்தளங்களுக்கு மீண்டும் தடை!
இலங்கையில் சமூக வலைத்தளங்களுக்கு மீண்டும் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது என அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
சமூக வலைத்தளங்கள் இன்று காலை தொடக்கம் இலங்கையில் முடக்கப்பட்டுள்ளன.
சிலாபம், குளியாப்பிட்டிய உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்றுப் பரவிய வன்முறைகளை அடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்கள் ஊடாகப் பரவும் வதந்திகளைத் தடுக்கவே இந்தத் தற்காலிக தடைவிதிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.