கோர விபத்தில் சிக்கி 2 நடிகைகள் மரணம்! – அதிர்ச்சியில் பொலிவூட் திரையுலகு
தெலுங்கானா மாநிலத்தில் நடந்த வீதி விபத்தில் ஒரே பஸ்ஸில் பயணம் செய்த இரண்டு தெலுங்கு நடிகைகள் பலியானது பொலிவூட் திரையுலகை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
பிரபல தெலுங்கு தொலைக்காட்சி நடிகைகள் அனுஷா ரெட்டி, பார்கவி ஆகிய இருவரும் படப்பிடிப்பில் கலந்துகொண்டுவிட்டு படப்பிடிப்பு முடிந்ததும் பஸ் ஒன்றில் ஐதராபாத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென எதிர்பாராத விதமாக பஸ், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து மரம் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் நடிகை பார்கவி சம்பவ இடத்திலேயே பலியானார்.
படுகாயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நடிகை அனுஷா ரெட்டி சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.
இந்த விபத்தில் சாரதியும், நடிகைகளுடன் பயணம் செய்த இன்னொருவரும் படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.