இரு குடும்பஸ்தர்கள் வெட்டிப் படுகொலை!
செவணகல, துங்கமயாய பிரதேசத்தில் இன்று அதிகாலை 4 மணியளவில் குடும்பஸ்தர்கள் இருவர் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பயிர் நிலம் ஒன்றில் அமைக்கப்பட்டிருந்த குடிசையில் உறங்கிக் கொண்டிருந்தவர்களே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் அதே பிரதேசத்தைச் சேர்ந்த 39 மற்றும் 54 வயதுடைய இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
செவணகல பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கமைய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் மேலும் கூறியுள்ளது.