முழு சுற்றிவளைப்பு: 289 பேர் கைது, 9604 பேருக்கு வழக்கு

நாடு முழுவதிலும் இன்று(13) காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேர விசேட சுற்றிவளைப்பின் போது மது போதையில் வாகனம் செலுத்திய 289 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (12) காலை 6.00 மணி முதல் இன்று (13) காலை 6.00 மணி வரையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தவிர போக்குவரத்துச் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் கீழ் 9604 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் 20 ஆம் திகதி வரையில் நாடு தழுவிய ரீதியில் இந்த விசேட பொலிஸ் சுற்றிவளைப்பு நடவடிக்கை தொடரும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *