மக்களே அவதானம்! நாளை வெப்பம் உச்சம் தொடும்
குருணாகல், புத்தளம், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, ஹம்பாந்தோட்டை, மொனராகலை ஆகிய மாவட்டங்களில் நாளை (2ஆம் திகதி) கடும் வெப்பம் நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
உஷ்னமான காலநிலை நிலவும் சந்தரப்பங்களில் நிழலான இடங்களில் நடமாடுமாறும் அதிக நீர் பருகுமாறும் திணைக்களம் மக்கள் கோரப்பட்டுள்ளனர்.
மஇதேவேளை, இன்று (01) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் குருநாகலில் அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது.
வவுனியாவில் 38.1 பாகை செல்சியஸ் வெப்பநிலையும் அநுராதபுரம் மற்றும் பொலன்னறுவை பகுதிகளில் 37.6 பாகை செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது.