சுயதொழில் முயற்சியாளர்களுக்கான வாழ்வாதாரம் வழங்கும் நிகழ்வு
கைத்தொழில், வர்த்தகம், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி மற்றும் திறன் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி அமைச்சின் கீழான தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபையின் ஊடாக அக்கரைப்பற்று பிரதேச சுயதொழில் முயற்சியாளர்களுக்கான வாழ்வாதாரம் வழங்கும் நிகழ்வில பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் (31) கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி, பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப், தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் சிராஸ் மீராசாஹிப், கட்சியின் செயலாளர் நாயகம் சுபைர்தீன் உட்பட பல முக்கியஸதர்கள் கலந்து கொண்டனர்.