பசிலின் திட்டத்தால் பணவீக்கம் ஏற்படுவதை தவிர்க்க முடியாது!

நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவால் வழங்கப்பட்ட 229 பில்லியன் ரூபா பாரிய நிவாரணப் பொதியை வழங்குவதற்கு பணம் அச்சிடப்பட்டால் எதிர்காலத்தில் பாரிய பணவீக்கம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது என இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் செயலாளர் டியூ குணசேகர தெரிவித்துள்ளார்.

இந்த நிவாரணப் பொதியானது பொருளாதார ரீதியிலான முடிவை விட அரசியல் ரீதியான முடிவாகவே தென்படுகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த நிவாரணப் பொதிகளுக்காக இலங்கையின் உற்பத்திப் பொருட்களை பயன்படுத்தியிருந்தால், இவ்வளவு பணவீக்கம் ஏற்பட்டிருக்காது என்றும் அவர் தெரிவித்தார்.

நாட்டில் இவ்வளவு வலுவான டொலர் நெருக்கடி ஏற்படுவது இதுவே முதல் முறை என்றும் பணத்தை அச்சடிக்க அச்சடிக்க நாட்டில் பணவீக்கம் உருவாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *