உகனவில் பயங்கரம்! கணவனால் மனைவி அடித்துப் படுகொலை!!
குடும்பப் பிரச்சினை காரணமாக நபர் ஒருவர் தனது மனைவியை அடித்துக் கொலை செய்துள்ளார்.
தாக்குதலில் பலத்த காயங்களுக்குள்ளான குறித்த பெண் கொனாகொல்ல வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
உகன, பியங்கல பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் சந்தேகநபரான கணவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் உகனப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.