ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா 4ஆவது திருமணத்துக்கும் ‘ரெடி’

ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி, பிரான்ஸ் கோடீசுவரரை மணக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி (வயது 43). இவர் 1996-ம் ஆண்டு டி.வி. பிரபலம் ஜானி லீ மில்லரை திருமணம் செய்தார்.

 2000-ம் ஆண்டில் விவாகரத்து செய்தார். பின்னர் நடிகர் பில்லி பாப் தாம்டனை 2-வது திருமணம் செய்தார்.

2000-ம் ஆண்டு நடந்த இந்த திருமணம் 3 ஆண்டில் முடிவுக்கு வந்தது. 3-வது முறையாக நடிகர் பிராட் பிட்டை 2014-ல் திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணமும் 2016-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது.

பிராட் பிட்டைப் பொறுத்தமட்டில், அவர் தனது முன்னாள் மனைவி ஜெனிபர் ஆனிஸ்டனுடன் இணைந்து வாழ முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் ஏஞ்சலினா ஜோலி 4-வது திருமணத்துக்கு திட்டமிட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கோடீசுவரர் சேட்டோ மிராவல் என்பவரை ஏஞ்சலினா ஜோலி திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும், பிரான்சில் குடியேறப்போவதாகவும் ‘லைப் அண்ட் ஸ்டைல்’ பத்திரிகை செய்தி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏஞ்சலினா ஜோலிக்கு 6 குழந்தைகள் இருப்பதும், அதில் சில குழந்தைகள் தத்து குழந்தைகள் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *